செவ்வாய், 27 மே, 2014

சார்க் நாட்டு தலைவர்களுடனான பிரதமர் நரேந்திரமோடி பேச்சு வார்த்தை

இலங்கை தமிழர்
நிலை குறித்து பிரதமர்
நரேந்திரமோடி இலங்கை அதிபர்
ராஜபக்சேவுடன்
விவாதித்தார் என்றும்,
தமிழர்கள்
நிலை குறித்து அக்கறை கொள்ள
பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும்
இலங்கை வர ராஜபக்சே விடுத்த
அழைப்பை மோடி ஏற்று கொண்டார்
என்றும் இந்திய
வெளியுறவு துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். சார்க்
நாட்டு தலைவர்களுடனான பிரதமர்
நரேந்திரமோடியின் இன்றைய
பேச்சு பயனுள்ளதாகவும், சார்க்
நாட்டு உறவுகள் வலுப்பெறும்
வகையிலும் இருந்தது என
வெளியுறவு துறை செயலர்
சுஜாதாசிங் கூறினார். பிரதமர்
நரேந்திரமோடி இன்று அண்டை நாடான
ஆப்கான், பாகிஸ்தான், இலங்கை,
நேபாளம், மொரீஷியஸ்,
மாலத்தீவு தலைவர்களுடன்
இன்று பேச்சு நடத்தினார். இதில் என்ன
விஷயங்கள்
குறித்து விவாதிக்கப்பட்டது என்பதை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க
கடமைப்பட்டுள்ளோம். இது குறித்து அவர் மேலும்
கூறுகையில், ஆப்கனில் பயங்கரவாதம்
ஒழிப்புக்கு இந்தியாவின்
ஒத்துழைப்பு குறித்து பிரதமர்
நரேந்திரமோடி அதிபர் கர்சாயுடன்
பேசினார். சமீபத்திய இந்திய தூதரகம்
மீது நடந்த தாக்குதல்
முறியடிப்புக்கு உதவிய கர்சாயிக்கு ,
பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
மொரீஷியஸ் பிரதமர்
நவீன்சந்திர ராம் கூலமிடம் நடத்திய
பேச்சில் அமைதி, மற்றும் வளர்ச்சிப்பணிகள்
குறித்து விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகள் உறவு,
பொருளாதாரம்,
புதுப்பிக்கதக்க எரிசக்தி ஆகியன குறித்தும்,
இந்திய கடல் பகுதியில் இரு நாடுகள்
ஒத்துழைப்பு ஆகியன குறித்தும்
விவாதிக்கபட்டன.
பூட்டான் மன்னர் ஷெரீங்
டாப்கேவிடம் நடத்திய பேச்சில் ,
சிறப்பு சமூக சேவைக்கு உதவி, எனர்ஜி மற்றும்
சர்வதேச அரசியல் நிலவரம்
குறித்து விவாதிக்கப்பட்டது.
மாலத்தீவு அதிபர்
அப்துல்லா கயூமுடன் நடந்த பேச்சில்,
இரு நாடுகளும் தேசிய அளவிலான
பங்கீட்டில் ஒத்துழைப்பு. மற்றும்
பயங்கரவாத
ஒழிப்பு தொடர்பாக
ஒத்துழைப்பது,
போக்குவரத்து இணைப்பு ஆகியன,
பெட்ரோலியம், எண்ணெய்
துறையில் பங்கீடு, ஆகியன
விவாதிக்கப்பட்டன.
நேபாள பிரதமர்
கொய்ராலாவுடன் , நேபாள-
இந்தியா, நேபாள இருநாடுகளும்
பாரம்பரிய, கலாச்சார விஷயத்தில்
உடன்பாடுகள்,
பொருளாதார ரீதியிலான,
நடவடிக்கைகள், ஹைட்ரோ பவர், அமைப்பதில்
தேவையான உதவிகள் ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன்,
நடத்தப்பட்ட பேச்சில், இந்தியாவின்
உணர்வுப்பூர்வ விஷயங்கள், தமிழ்
மக்கள் வாழ்க்கைத்தரம், 13 வது சட்ட
திருத்தம் கொண்டு வருவது,
வர்த்தக ரீதியிலான உறவு,
போக்குவரத்து இணைப்பு, ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டன . மீனவர்கள்
பிரச்னை என்பது நீண்ட காலமாக
இருந்து வருகிறது இது குறித்து தீர்க்க
தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும்.
தமிழர் நிலையில் இந்தியாவின்
உணர்வை அந்நாடு மதிக்கும் என்ற
நம்பிக்கை இன்றைய பேச்சின் மூலம்
ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்
ஷெரீப்புடன் : பாகிஸ்தான்
நிச்சயம் இந்தியாவுக்கான
பயங்கரவாதத்தை ஒழிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்
நரேந்திரமோடி வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான
எல்லை பயங்கரவாத செயல்கள்
நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இந்திய (மும்பை)
குண்டு வெடிப்பு தொடர்பான
வழக்கில், உடனடியாக
இயல்பு நிலைக்கு இரு நாடு பிரச்னைகளும்
வரவேண்டும், பொருளாதாரம்,
அரசியல், கலாச்சாரம்
ஆகியனவற்றில் முன்னேற்ற நடவடிக்கை வர
வேண்டும் என்பது குறித்தும்
விவாதிக்கப்பட்டது.
வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின்
வாழ்த்துக்களை அந்நாட்டு சபாநாயகர்,
பிரதமர் மோடிக்கு தெரிவித்தார். நீண்ட
கால உறவு நண்பராக இருந்து,
ஒன்றிணைந்து, ரயில்,
சாலை போக்குவரத்து ஆகியவற்றில்
தேவையான உடன்பாடுகள் ஆகியன
குறித்து விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு வெளியுறவு செயலர்
சுஜாதாசிங் கூறினார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக